சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைப்பு

புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

News image

ஏற்காடு செல்ல தடை விதித்துள்ளதை அறியாமல் ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பும் காவலர்கள்.

Updated On :1 ஜனவரி 2021, 7:54 pm


சேலம்: புத்தாண்டை முன்னிட்டு ஏற்காடு செல்ல முயன்ற சுற்றுலாப் பயணிகள், அடிவார சோதனைச் சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்ட ஏற்காடு சுற்றுலா தலங்கள் டிச.31 மாலை முதல் ஜன.2 மாலை வரை மூடப்படுகிறது. 

மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் மாவட்ட சுற்றுலா அலுவலர் வெ. ஜெனார்த்தனம்  தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் புத்தாண்டையொட்டி கார்கள், இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு செல்ல வந்த சுற்றுலாப் பயணிகளை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தி காவலர்கள் திருப்பி அனுப்பினர்.