விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் கரும்பு, சக்கரை, ஏலக்காய், திராட்சை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 5.86 லட்சம் லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில் அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்தில் ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


