சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோவில் புரத்தில் ஒரே கருஙகல்லிலால் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 10:01 pm

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோவில் புரத்தில் ஒரே கருஙகல்லிலால் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

Story image

வெள்ளிக்கிழமை ஆங்கில புத்தாண்டையொட்டி கோ பூஜை, ஹோமம் , விநாயகர்,  51 அடி  உயர அம்மன், சொர்ணாம்பிகை அம்மன், சர்வதேச கரிய நாக் சொரூபிணி அம்மன் வாராகி, துர்காதேவி உள்ளிட்ட சாமிகளுக்கு  சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. 

Story image

இதேபோல் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் பெருமாளுக்கும் 108 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை இருந்து தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Story image

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோன்று  இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோயிலில் விநாயகர், முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

Story image

பக்தர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.