செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் கோவில் புரத்தில் ஒரே கருஙகல்லிலால் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
_.jpeg)
வெள்ளிக்கிழமை ஆங்கில புத்தாண்டையொட்டி கோ பூஜை, ஹோமம் , விநாயகர், 51 அடி உயர அம்மன், சொர்ணாம்பிகை அம்மன், சர்வதேச கரிய நாக் சொரூபிணி அம்மன் வாராகி, துர்காதேவி உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
_.jpeg)
இதேபோல் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் பெருமாளுக்கும் 108 திவ்ய தேசங்களில் உள்ள பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை இருந்து தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோன்று இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோயிலில் விநாயகர், முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
_.jpeg)
பக்தர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


