சென்னையில் மழையால் ஏற்படும் சேதங்கள் மற்றும் குறைகளை அந்தந்த மண்டல அலுவலர்களிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் ஏற்படும் சமயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மழை பாதிப்பு குறித்து 1913 என்ற புகார் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த மண்டல அலுவலர்களை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
மழைக்காலத்தில் ஏற்படும் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல அலுவலர்களின் எண்கள்:
திருவொற்றியூர் - 9445190001
மணலி - 9445190002
மாதவரம் - 9445190003
தண்டையார்பேட்டை - 9445190004
ராயபுரம் - 9445190005
திரு.வி.க. நகர் - 9445190006
அம்பத்தூர் - 9445190007
அண்ணா நகர் - 9445190008
தேனாம்பேட்டை - 9445190009
கோடம்பாக்கம் - 9445190010
வளசரவாக்கம் - 9445190011
ஆலந்தூர் - 9445190012
அடையாறு - 944519001
பெருங்குடி - 9445190014
சோழிங்கநல்லூர் - 9445190015
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

