சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கருணாநிதி மீது அவதூறு வழக்கு

திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஒரு அவதூறு வழக்கு புதன்கிழமை (செப். 11) தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 7:00 am

திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஒரு அவதூறு வழக்கு புதன்கிழமை (செப். 11) தாக்கல் செய்யப்பட்டது.

திமுகவின் தினசரி நாளிதழான முரசொலியில் கலைஞர் பதில்கள் என்ற செய்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி வெளியானது.

அதில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர்கள் பலர் தூங்கிக்கொண்டிருந்த படம் தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியானது.

அந்தப் படம் வெளியிடப்பட்டதால்தான் திருவண்ணாலை மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி தேசிய சட்டப் பள்ளி தொடக்க விழாவுக்கான இரண்டு பக்க அரசு விளம்பரம் தினமலருக்கு தரப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த செய்தி உண்மைக்குப் புறம்பாகவும் உறுதிப்படுத்தப்படாமலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதனால், முதல்வரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்த செய்தியை எழுதிய கருணாநிதி மீதும், முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.செல்வம் மீதும் முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன், சிறப்பு வழக்குரைஞர் அசோகன் ஆகிய இருவரும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும், இது திமுக தலைவர் கருணாநிதி மீது தாக்கல் செய்யப்படிருக்கும் 12-ஆவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.