தமிழகக் கடலோர பாதுகாப்புக்கு, ரூ.160 கோடி செலவில் 20 அதிநவீன ரோந்துப் படகுகள் விரைவில் வாங்கப்படவுள்ளன என, கடலோரக் காவல்படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கடலூர் துறைமுகம் பகுதியில், புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் 1,076 கி.மீ., தொலைவுள்ள கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள 591 மீனவ கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருக்கு இலவசமாக செல்போன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகக் கடலோர பாதுகாப்புக்கு, ரூ.160 கோடி செலவில் 20 அதிநவீன ரோந்துப் படகுகள் விரைவில் வாங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் 12 இடங்களில் கடலோரப் பாதுகாப்பு காவல் நிலையங்கள் உள்ளன. மேலும் 30 இடங்களில் இத்தகைய காவல் நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை மற்றும் தேவனாம்பட்டணத்தில் இந்த காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
கடந்த 2012-ஆம் ஆண்டில் நேரிட்ட 16 படகு விபத்துகளில், கடலில் தத்தளித்த 49 பேர் கடலோர காவல்படையால் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரைக் காணவில்லை. 10 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை நேரிட்ட 22 படகு விபத்துகளில் 110 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். படகில் இலங்கைக்கு செல்ல முயன்று நடுக்கடலில் தத்தளித்த 120 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


