தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், புதன்கிழமை ஆஜராகாத அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் அக்கட்சியின் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்றது.
அதில் பேசிய விஜயகாந்த், தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் அவதூறாகப் பேசியதாக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் ஏ. குப்புசாமி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் பிப். 27-ஆம் தேதி ஆஜரானார். அப்போது அவர் மீதான புகார் தொடர்பாக பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விஜயகாந்துக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன. "மற்ற மாவட்டங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஆஜராக செல்வதாலும், தொகுதி மக்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாலும், அவரால் இங்கு ஆஜராக இயலவில்லை' என, விஜயகாந்த் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறியதால் 3 முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.சேதுமாதவன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் ஜகதீசன் உள்ளிட்டோர், நீலகிரியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால் விஜயகாந்த் இங்கு வர இயலவில்லை என, மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஆஜராகாத விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்டும், செப்டம்பர் 23-ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


