தமிழக அரசியலில் தேமுதிக தவிர்க்க முடியாத சக்தியாக மலர்ந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் தனது 61-ஆவது பிறந்த நாளை ஆகஸ்ட் 25-ஆம் தேதி கொண்டாடுகிறார்.
இந்நிலையில் விஜயகாந்த் தன் பிறந்த நாள் தொடர்பாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தீராத பல பிரச்னைகள் உள்ளன.
அவற்றைத் தீர்க்கும் முயற்சியில் தேமுதிக எதிர்காலத்தில் ஈடுபடும். அதே நேரம் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றால் தற்போது தவிக்கும் தமிழக மக்களுக்கு உரிய தொண்டு புரிவோம்.
ஒரு நல்ல எதிர்காலம் தமிழக மக்களுக்கு அமைய என் பிறந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம். தமிழக அரசியலில் தேமுதிக ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மலர்ந்துள்ளது. அதற்காக தமிழக மக்களுக்குக் கடமைப் பட்டுள்ளேன். தமிழக மக்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
பிறந்த நாளில்... வறுமை ஒழிப்பு தினமாக என் பிறந்த நாளைக் கடைப்பிடித்து வருகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரைத் தேர்வு செய்து, அவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.65 லட்சம் செலவில் 4 சக்கரங்கள் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்கள் வழங்க உள்ளேன்.
எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உள்ளேன். தேமுதிகவின் 59 மாவட்டங்களிலும் இதுபோன்ற நல உதவிகளை வழங்க வேண்டும். ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணிக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்தாலும், அந்தச் சோதனைகளைச் சாதனைகளாக்கி மக்களுக்குத் தொண்டு செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

