கூவம் ஆற்றில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றறனர்.
சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேல்நிலை விரைவு சாலை திட்டப் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தால் கூவம் ஆற்றில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அதனால் மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய வெள்ள அபாயங்கள், அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா அண்மையில் ஆய்வு நடத்தினார்.
திட்டம் தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்துள்ள வழக்கு குறித்தும் முதல்வர் ஆலோசனை செய்தார்.
இந்தக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், துறையின் செயலாளர் சாய்குமார், அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

