கம்பம் ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் படுகொலை செய்யப்பட்டதற்கு அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளிட்ட அறிக்கை:- எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கம்பம் ஒன்றிய தேமுதிக துணை செயலாளர் சின்னமுருகன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சனிக்கிழமை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை திருநெல்வேலி 18-வது வார்டு கவுன்சிலர் தானேஸ்வரன் மோட்டார் சென்றபோது, அவரை வெட்டி கொலை செய்யும் முயற்சியில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசியல் உள்நோக்கத்துடன்தான் அரசியல் எதிரிகளால் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. காவல்துறை என்பது ஆளங்கட்சியினருக்கு மட்டும் பாதுகாப்பு தருவதாக இருக்கக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டும். இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

