ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் 3 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சக்கர நாற்காலி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
இது குறித்து ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளையின் செயலாளர் மனோஜ் கூறியது: ஆதிநாத் ஜெயின் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவிகள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கும் முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினோம். இது, ஆகஸ்ட் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 3000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பில் இலவச உபகரணங்கள் வழங்க உள்ளோம். இதில், 400 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள் வழங்ககிறோம். 450 பேருக்கு பல் பிரச்னைகள் உடனடியாக சரி செய்கிறோம். இது, தென் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்து வழங்குகிறோம். தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகமான செயற்கை கால்கள் மற்றும் நாற்காலிகள் வழங்க உள்ளோம் என்றார் அவர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

