மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 16,912 கன அடியாக ஞாயிற்றுக்கிழமை குறைந்தது. அணைக்கு சனிக்கிழமை நொடிக்கு 25,890 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பின. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால், கடந்த 4-ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அணையின் நீர்மட்டம் 121 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் உபரி நீர்ப் போக்கி வழியாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
கடந்த இரு நாள்களாக கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வந்தது.
இதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் முழுவதுமாக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை அணைக்கு நொடிக்கு 16,912 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்துக்கு நொடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்தைவிட திறப்பு அதிகமாக இருந்ததால், ஒரு வாரத்திற்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.99 அடியாகக் குறைந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

