நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து நாகை வட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 36 பேரும், காரைக்கால் மாவட்டத்திலிருந்து 4 விசைப் படகுகளில் சென்ற 29 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தகவலறிந்த நாகை நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை ஆகிய மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தன்னெழுச்சியாக வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாகை அக்கரைப்பேட்டையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நாகை வட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் நாகூர் ஆர்யநாட்டுத் தெரு உள்ளிட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர். இதில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 74 பேரை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை மாலை பிடித்து கைது நடவடிக்கை இல்லாமல், எச்சரித்து அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை மாலை உறுதி செய்யப்படாத தகவல் வெளியானது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

