இலங்கை நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த காற்று காரணமாக திசைமாறி ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.
இலங்கை நீர்க்கொழும்பு பகுதி கஜினிகுடியைச் சேர்ந்த வருணகுல சூரி சேவியரின் மகன் வருணகுல சூரி செலஸ்டின் செனோமனி (32), காட்டுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த வருணகுல சூரி செட்ரிக் மகன் வருணகுல சூரி ஜெயபால் புஷ்பகுமார் (39) ஆகிய இருவரும் மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த காற்று வீசியது. அதனால் அவர்கள் வந்த படகு ராமேசுவரம் அருகே பழுதாகி நின்றது. அப்போது அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் அவர்களிடம் ராமேசுவரம் அருகே இருப்பதாகத் தெரிவித்தனர்.
இலங்கை மீனவர்கள் படகில் வேகமாகச் செல்ல முடியாததால் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியுள்ளனர். இவர்களிடம் உள்ளூர் போலீஸôரும், உளவுப் பிரிவு போலீஸôரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

