என்.எல்.சி.யில் அத்தியாவசிய சேவைப் பிரிவின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களும் புதன்கிழமை ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் குடிநீர் விநியோகம், மருத்துவமனை செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் என்.எல்.சி. தொழிலாளர்கள், சில அத்தியாவசிய சேவைப் பிரிவின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஸ்டிரைக்கிலிருந்து விலக்கு அளித்திருந்தனர்.
இந்நிலையில் அந்தப் பிரிவின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களும் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதன்கிழமை என்.எல்.சி. மருத்துவமனையின் செயல்பாடு பெருமளவில் பாதிக்கப்பட்டது.
புறநோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை நிலையம், எக்ஸ்ரே, ஸ்கேனிங், கட்டு கட்டுமிடம், உள்நோயாளிகள் சேர்க்கைக் கவுன்ட்டர் உள்ளிட்டப் பிரிவுகள் மூடப்பட்டிருந்தன.
அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஐசியு உள்ளிட்ட வார்டுகள் மட்டும் இயங்கின. மருத்துவர்கள் மற்றும் சில செவிலியர்கள் பணிக்கு வந்திருந்த போதிலும், துப்புரவுப் பணியாளர்கள், செவிலியர் உதவியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வரவில்லை. உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பெரும்பாலானோர் செவ்வாய்க்கிழமை இரவே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் பெற்றுக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதால் உள்நோயாளிகள் வார்டுகளில் படுக்கைகள் காலியாக இருந்தன. என்எல்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 640 ஊழியர்களும், நகர நிர்வாகத்தின்கீழ் உள்ள அத்தியாவசிய சேவைப் பிரிவின் கீழ் 750 ஊழியர்களும் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்.எல்.சி. மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் காலியாக உள்ள படுக்கைகள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

