சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொதுச் சொத்துக்கு சேதம்: பாமக பதிலளிக்க 4 வாரம் அவகாசம்

மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவை ஒட்டி நடைபெற்ற வன்முறைச்

Updated On :2 ஜூலை 2013, 8:10 am

மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவை ஒட்டி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

   இந்தச் சேதங்களுக்கான இழப்பீட்டை பாமகவிடம் இருந்து கோருவோம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவும், சேதத்தை மதிப்பிட்டு அவற்றை மீட்கவும் விசாரணை அதிகாரியாக வருவாய் மற்றும் நிர்வாக ஆணையாளர் நியமிக்கப்பட்டார். ரூ.100 கோடி அளவுக்கு சேத மதிப்பாக மதிப்பிடப்பட்டுள்ளது.

   இந்த நிலையில், பாமக வழக்குரைஞர்கள் பாலு மற்றும் ஜோதி ஆகியோர் வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆஜராகினர். அரசிடம் இருந்து சம்மன்களைப் பெற்றுக் கொண்ட அவர்கள், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தங்களது பதிலை தெரிவிக்க எட்டு வாரங்கள் வரை கால அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்புத் தெரிவித்து, நான்கு வார காலங்களுக்குள் பதிலைத் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டது.