முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணையில் ஆஜர் ஆகாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி கேப்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விஜயகாந்த் பேச்சு தொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அந்த மனுவை தாக்கல் செய்தார்.
அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு தரப்படும் விளம்பரங்கள் குறித்து பேசிய விஜயகாந்த், உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறியதோடு, முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஜூலை 1-ஆம் தேதி விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
எனினும் விஜயகாந்தோ அல்லது அவரது வழக்குரைஞர்களோ யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து விஜயகாந்துக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை இம்மாதம் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

