கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு 4 மாதங்களுக்குப் பிறகு படகுப் போக்குவரத்து திங்கள்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரி அருகே கடலில் அமைந்துள்ள பாறையொன்றில் அமைந்துள்ளது 133 அடி உயர திருவள்ளுவர் சிலை. கடந்த 1.1.2000-ல் திறந்து வைக்கப்பட்ட இச்சிலையை பார்வையிடுவதற்காக படகுகள் மூலம் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
உப்புக் காற்றால் சிலை சேதமடையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக்கான் என்னும் ரசாயனக் கலவை பூசப்படுகிறது. சிலை அமைக்கப்பட்ட பின்
3-வது முறையாக ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கான பணியை நெய்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வந்தது.
சிலையில் ரசாயனக் கலவை பூசும் பணி கடந்த ஜூன் 15-ம் தேதி நிறைவடைந்த நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை படகுப் போக்குவரத்து தொடங்கியது.
திருவள்ளுவர் சிலையைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கிய நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு காலை 9 மணிக்கு முதல் படகு 150 பயணிகளுடன் சென்றது.
திடீர் நிறுத்தம்: திருவள்ளுவர் சிலைக்கு 3 முறை படகுகள் சென்று வந்த நிலையில் திடீரென சிலை அமைந்துள்ள படகுத் தளத்தில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் பகல் 11 மணிக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்பட்டன. முதல் நாளே படகு சேவை தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

