சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஏகாம்பரநாதர் கோயிலில் வருண ஜெபம்

மழை வேண்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிவகங்கை தீர்த்தத்தில் வருண ஜெபம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஜூலை 2013, 8:35 am

மழை வேண்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிவகங்கை தீர்த்தத்தில் வருண ஜெபம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விஜய வருடத்தில் நல்ல மழை பெய்து நாடு செழிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் வருணயாகம், வருண ஜெபம், சிறப்பு பூஜை நடத்த தமிழக இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வர்ணயாகம் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திங்கள்கிழமை காலை ருத்ர அபிஷேகம், சிவகங்கை தீர்த்தத்தில் விரணஜெபம், வேதமந்திர பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. ஓதுவார்கள் திருமுறை பாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.