சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாலத்தில் கார் மோதி இருவர் சாவு

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On :22 ஜூன் 2013, 9:20 am

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நரசிம்மர் கோயிலைச் சேர்ந்த மனோகரன் மகன் பாலாஜி (40). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மகன் சிவசங்கர் (42) ஆகிய இருவரும் திருத்தணி முருகன் கோயில் பகுதியில் பஞ்சாமிர்தக் கடை நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன், திருத்தணி நரசிம்மர் கோயில் தெருவைச் சேர்ந்த சம்பத் (55) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (50) ஆகிய நான்கு பேரும், வெல்லம் வாங்குவதற்காக காரில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு வந்தனர்.

சென்னை ஆவடி களிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் பாலாஜி (40) காரை ஓட்டி வந்தார்.

வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச் சாவடி அருகேயுள்ள புலவர்பாளையம் பாலத்தில் கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தேசிய நெடுஞ்சாலை அவசர ஊர்தி மூலம் நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு கார் ஓட்டுநர் பாலாஜியும், திருத்தணியைச் சேர்ந்த சம்பத்தும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு பாலாஜி, ஆனந்தன், சிவசங்கர் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.