தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளிக்கிழமை தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.
சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்த சண்முகக்கனி மகன் மகாலிங்கம் (55). இவரும், செங்குன்றத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் தினேஷ் (24), சென்னை பாடியநல்லூர் கணேசன் மகன் கண்ணன் (40) ஆகியோர் காரில் தூத்துக்குடி வந்தனர்.
தூத்துக்குடியில் வேலையை முடித்துவிட்டு, சென்னைக்கு காரில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். அப்போது எப்போதும்வென்றானை அடுத்துள்ள சிவஞானபுரம் விலக்கு அருகே எதிர்பாராதவிதமாக அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் உயிரிழந்தார். காயமடைந்த தினேஷ் மற்றும் கண்ணன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

