சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குற்றாலம்: ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது தண்ணீர்!

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதைத் தொடர்ந்து பேரருவியில் வெள்ளிக்கிழமை தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

Updated On :22 ஜூன் 2013, 9:09 am

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதைத் தொடர்ந்து பேரருவியில் வெள்ளிக்கிழமை தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான சாரல் மழை, வெயிலுமாக மாறிமாறி தட்ப வெப்பநிலை நிலவியது. குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிகளவில் தண்ணீர் விழுகிறது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: இதற்கிடையே, பேரருவியில் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

தொடர் சாரல் மழை காரணமாக பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் பேரருவியில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.