கோபி அருகே கடைக்குள் லாரி புகுந்த விபத்தில் லாரி உரிமையாளர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகிலுள்ள அக்கம்மாபேட்டையைச் சேர்ந்தவர் முருகேசன் (47), லாரி உரிமையாளர். இவர் மைசூரில் சிமென்ட் கலவையை ஏற்றிச் செல்லும் லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்தார்.
வெள்ளிக்கிழமை ஒரு சிமென்ட் கலவை லாரியைப் பழுது பார்ப்பதற்காக மைசூரிலிருந்து ஊருக்கு ஓட்டி வந்தார்; லாரியை அவரே ஓட்டினார். அந்த லாரி, ஈரோடு மாவட்டம், கோபி, கச்சேரி மேட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தது.
அப்போது லாரி திடீரென ரோட்டோரமாக இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் லாரியை ஓட்டிவந்த முருகேசன் இடிபாட்டுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து, கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான முருகேசனுக்கு மலர்விழி (40) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

