இந்த ஆண்டின் சிறந்த அதிகாரிக்கான விருதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு பியூரோகிரசி பிரபல ஆங்கில இதழ் வழங்கி கெளரவித்துள்ளது.
÷மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் தொடர்பாக, புதுதில்லியிருந்து வெளியாகும் பியூரோகிரசி எனும் ஆங்கில இதழ் செய்திகள் வெளியிட்டு வருகிறது.
மேலும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் சாதனைகளைப் பாராட்டி விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
அதன்படி இவ்வாண்டின் சிறந்த பொதுத் துறை நிறுவனங்களையும், அந்நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையும் தேர்வு செய்வதற்காக பிரமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட நடுவர் குழுவினர் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனை இவ்வாண்டின் சிறந்த அதிகாரியாக தேர்வு செய்தனர்.
இதற்கான விருது வழங்கும் விழா புதன்கிழமை புதுதில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் ஹரியானா மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா, அருணாச்சல பிரதேச ஆளுநர் நிர்பாய் ஷர்மா, சட்டீஸ்கர் மாநில ஆளுநர் சேகர்தத் ஆகியோர் கலந்துகொண்டு என்எல்சி தலைவருக்கு சிறந்த அதிகாரிக்கான விருதை வழங்கி கெளரவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

