சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குளறுபடி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

Updated On :22 ஜூன் 2013, 9:07 am

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியானது.

மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 20-ஆம் தேதி அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிச்சிவாக்கம், உள்ளாவூர், குண்டுகருமேடு, வடக்குமனையம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன.

அதாவது உரிய மாணவரின் புகைப்படத்துக்கு பதிலாக மற்றொரு மாணவரின் புகைப்படம், ஊர் பெயரில் எழுத்துப் பிழை, ஊர் பெயரில் பின்கோடு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இப்புகாரைத் தொடர்ந்து மாவட்டக் கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வுத் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய பிழைகளை திருத்தி தரக் கோரி ஆசிரியர்கள் அணுகினர்.

அடுத்த ஓரிருநாளில் உரிய பிழைகள், புகைப்படங்கள் திருத்தி தருவதாக தேர்வுத்துறை உறுதியளித்துள்ளது.

இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பித்தது முதலே பல்வேறு குளறுபடிகளை கல்வித்துறை சந்தித்து வந்தது. 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மாயமானது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டுள்ள குளறுபடி கல்வித் துறை மீது பெற்றோர்கள் வைத்துள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது.