ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து மே 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதே புகாரில் மும்பை போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதனையடுத்து, விக்ரம் அகர்வால் மும்பை குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜரானார். அவரிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மூன்று முறை சம்மன் அனுப்பிய நிலையில், விக்ரம் அகர்வால் கிண்டியில் உள்ள தமிழக சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட விக்ரம் அகர்வாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய போலீஸார், அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால், அவரை மூன்று நாள்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். வரும் ஜூன் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் மீண்டும் அவரை ஆஜர்படுத்த வேண்டும்.
குருநாத் மெய்யப்பன், விண்டு தாரா சிங் ஆகியோருடன் உள்ள தொடர்பு குறித்தும் அவர் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்தும் விசாரிக்கப்படும். அவர் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு சுமார் 50-க்கு முறைக்குமேல் பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரிக்கப்படும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

