போலி பொட்டாஷ் உரம் விற்பனை செய்து வந்ததாக, வாணியம்பாடியைச் சேர்ந்த 5 பேரை கர்நாடக போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில வேளாண்மை அதிகாரி நாகராஜலு ஹாசன் மாவட்டம் பேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வேளாண்மைத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து 10 ஆண்டுகளாக போலியான பொட்டாஷ் மூட்டைகள் விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கர்நாடக போலீஸôர் வாணியம்பாடியில் சில நாள்களாகத் தங்கி விசாரணை நடத்தினர். அப்போது வாணியம்பாடி அருகேயுள்ள பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு, மல்லக்குப்பம் பகுதிகளில் உள்ள குடோன்களில் போலி பொட்டாஷ் உரம் தயார் செய்யப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக வாணியம்பாடி புதூரைச் சேர்ந்த தேவராஜ், குமார், மூர்த்தி, பெருமாள்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், பாபு ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 10 பேரைத் தேடி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

