திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தடுப்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனையாக இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 90- ஆவது பிறந்த நாள் விழா,தேர்தல் நிதியளிப்பு விழாப் பொதுக்கூட்டம் ஆகியன மாவட்டச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியது:
தேர்தல் செலவுக்காக நிதி வசூலிக்க வேண்டியுள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் அவருக்குத் தகுதி உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான் அவர் பிறந்தநாளின் அறிவிப்பாகும். 150 ஆண்டுகால கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். ஜெயலலிதாகூட தேர்தல் அறிக்கையில் இதை வலியுறுத்திய நிலையில் இப்போது தேவையில்லை என்கிறார்.
இத் திட்டத்தை ஆரம்பத்தில் வலியுறுத்திய வைகோ, ஜெயலலிதா கூறியதற்கு இப்போது மெüனமாக உள்ளார். திமுகவுக்கு சிறப்பு வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தைப் பூட்டியது, சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு என திமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களைத் தடுப்பதுதான் ஜெயலலிதாவின் சாதனையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது என்றார்.
இக் கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் முதல்கட்ட தேர்தல் நிதியாக ரூ.4.55 கோடியை மு.க.ஸ்டாலினிடம் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

