சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொத்தடிமைகளாக இருந்த ஒடிசாவைச் சேர்ந்த 273 பேர் மீட்பு

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 273 பேரை வருவாய்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.

Updated On :12 ஜூன் 2013, 7:48 am

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 273 பேரை வருவாய்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் பகுதியில் ஈஸ்வரி செங்கல்சூளை இயங்கி வருகிறது.

இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக திருவள்ளூர் கோட்டாட்சியர் அபிராமிக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், கோட்டாட்சியர் அபிராமி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட செங்கல்சூளையில் சோதனை நடத்தினர்.÷அப்போது அங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 91 குடும்பங்களைச் சேர்ந்த 273 பேர் கொத்தடிமைகளாக இருந்ததது தெரியவந்தது.÷இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.÷இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவராவ், அங்கு வந்து விசாரணை நடத்தினார்.÷இதனைத்தொடர்ந்து, குழந்தைகளை தவிர்த்து மீதமுள்ள 189 பேருக்கு விடுதலை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.÷பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு அவர்கள் அனைவரும் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரியபாளையம் போலீஸார், தலைமறைவாகியுள்ள செங்கல்சூளை உரிமையாளரை தேடி வருகின்றனர்.