சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகளின் கடும் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், அதிகபட்சமாக இஞ்சி கிலோ ரூ.240, பீன்ஸ் கிலோ ரூ.100, சிறிய வெங்காயம் கிலோ ரூ.110 என விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், அண்மைக்காலமாக காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மாதந்தோறும் காய்கறிகளுக்கென தனி பட்ஜெட்டை ஒதுக்கும் நிலைக்கு நடுத்தரக் குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை (கிலோவில்): கோஸ் ரூ.20, அவரை ரூ.80, பீன்ஸ் ரூ.100, முருங்கைக்காய் ரூ.70, கேரட் ரூ.60, கத்திரி ரூ.50, கருணை ரூ.30, உருளை ரூ.30, முள்ளங்கி ரூ.30, மாங்காய் ரூ.20, வெண்டை ரூ.40, பீட்ரூட் ரூ.30, பச்சைமிளகாய் ரூ.50, இஞ்சி ரூ.240, வெங்காயம் ரூ.30 முதல் 40 வரை, சிறிய வெங்காயம் கிலோ ரூ.110, நாட்டுத் தக்காளி ரூ.35 முதல் ரூ.45 வரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை (சிறிதளவு) குறைந்த பட்சம் ரூ.5 முதல் அதிகப்பட்சம் ரூ.10 என விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து கோயம்பேட்டைச் சேர்ந்த வியாபாரி தியாகராஜன் கூறியது: தமிழகத்தில் காய்கறி விளைச்சல் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. அப்படி விளைச்சலாகும் காய்கறிகளும் அந்ததந்த பகுதிகளில் உள்ள சந்தைகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவு வருவதில்லை. இங்கு ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

