சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 8% அகவிலைப் படி உயர்வு எப்போது?

தமிழக அரசு அறிவித்துள்ள 8 சதவீத அகவிலைப் படி உயர்வு தங்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

Updated On :2 ஜூன் 2013, 8:51 am

தமிழக அரசு அறிவித்துள்ள 8 சதவீத அகவிலைப் படி உயர்வு தங்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

விலைவாசி உயர்வின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப் படி உயர்வை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வழங்கி வருகின்றன.

இதுபோல் 2013 ஜனவரி மாதத்துக்கான அகவிலைப் படி உயர்வை (8 சதவீத உயர்வு) மத்திய அரசு கடந்த ஏப்ரலில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் 8 சதவீத அகவிலைப் படி உயர்வை அறிவித்து, முன்தேதியிட்டு வழங்க உத்தரவிட்டது.

இதன்படி அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

இது குறித்து போக்குவரத்துக் கழக சங்க நிர்வாகிகள் கூறியது:

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் அகவிலைப் படி உயர்வு தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அடுத்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகே, முந்தைய ஆறு மாதத்துக்கான அகவிலைப் படி உயர்வை பெறும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

1-9-2010 தேதிக்கு முன்பு வரை இந்த நிலை இல்லை. அரசு அறிவித்தவுடன் எங்களுக்கும் அகவிலைப் படி உயர்வு கிடைத்துவிடும்.

ஆனால், 2010 ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசின் அனுமதி பெற்று அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுவிட்டது.

இதன் காரணமாக, ஒவ்வொரு முறையும் அரசு அறிவித்த பிறகு, போக்குவரத்துத் துறை செயலர் அரசிடம் மீண்டும் அனுமதி பெற்ற பிறகே போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கும் நிலை உள்ளது.

இந்த நிலையை மாற்றும் வகையில் வருகிற 1-9-2013 ஊதிய ஒப்பந்தத்தில், அகவிலைப் படி உயர்வு வழங்க அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை ரத்து செய்து, பிற அரசுத் துறை ஊழியர்களுக்கு உள்ளதுபோல் அரசு அறிவித்த உடன் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் கிடைக்கும் வகையில் வகை செய்ய வேண்டும் என்றனர்.