எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அரசு அனுமதி தர மறுப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதா மே 15-இல் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றுக்குப் பதில் அளித்துப் பேசினார்.
அதில், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய இந்த அரசு தயங்காது. நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கூறினார்.
காவல் துறையினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அனுமதி மறுக்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 15-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்துக்காக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னென்ன செய்தோம் என்பதையெல்லாம் மறந்துவிட்டுச் செயல்படுவது நல்லது இல்லை. ஆட்சி என்றைக்கும் நிரந்தரமில்லை. இதை தற்போதைய ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

