திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஏப்ரல் 30 முதல் தமிழகம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.
இந்நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக செங்கத்தை அடுத்த அரட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (23) என்பவரை செங்கம் காவல் நிலைய போலீஸôர் கைது செய்தனர். இதேபோல, மே 5-ஆம் தேதி போளூர் அருகே பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக எழுவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் சகாதி (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளேவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி பரிந்துரை செய்தார்.
ஆட்சியர் உத்தரவின்பேரில், செவ்வாய்க்கிழமை இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது குறித்த தகவல், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபாகரன், சகாதி ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

