அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் (ஐ.என்.எஸ். ராஜாளி) அத்துமீறி நுழைந்ததாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திங்கள்கிழமை அதிகாலை படைத்தளத்தின் புளியமங்கலம் கிராம எல்லையோரம் இளைஞர் உள்ளே நுழைந்துள்ளார்.
அப்போது படைத்தளத்தில் தீயணைப்பு நிலையத்தில் பணியிலிருந்த எபிநேசர் அளித்த தகவலின்பேரில், கடற்படை காவலர்கள் அங்கு சென்று இளைஞரை பிடித்தனர். விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டம் கோல்பூகூர் வட்டம் நந்தாஜ்கர் கிராமத்தை சேர்ந்த சோம்டுடூ (30) என்பதும் மனநலம் சரியில்லாதவர்போல் காணப்பட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, சோம்டுடூவை ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதள கமாண்டர் புனித்குமார் நகர போலீஸில் ஒப்படைத்தார்.
அவரிடம் நகர காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்ரும் வேலூர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸார், எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தினர்.
அந்த இளைஞர் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

