திருநெல்வேலி மேற்கு மாவட்ட தேமுதிக அவைத் தலைவர் கோதை மாரியப்பன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் கடந்த 1-ஆம் தேதி தேமுதிக சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுவிட்டு காரில் தனது சொந்த ஊரான சுரண்டைக்கு மாரியப்பன் அன்று இரவு திரும்பிக் கொண்டிருந்தார்.
திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்குவழி சாலையில் நான்குநேரி பகுதியிலுள்ள சுங்கச் சாவடிக்கு வந்தபோது அங்கிருந்த பணியாளர்கள் அவரிடம் சுங்கக் கட்டணத்தை கேட்டுள்ளனர். தேமுதிகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும்போது சுங்கவரி கட்டணத்தை செலுத்த முடியாது என்று அவர் தெரிவித்தாராம்.
இதையடுத்து அவருக்கும், அங்குள்ள பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கோதை மாரியப்பன் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி பணியாளர்களை மிரட்டியதாகத் தெரிகிறது.
இது தொடர்பான புகாரின்பேரில் நான்குநேரி போலீஸôர் அவரைக் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோதை மாரியப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதரி பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று கோதை மாரியப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி கோதை மாரியப்பன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

