உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
செவிலியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. ஜாதி, மதம் என எந்த பேதமும் இல்லாமல் தாய்க்கு நிகரான பரிவு, சகிப்புத் தன்மையுடன் அவர்கள் மகத்தான சேவை செய்து வருகின்றனர். ராணுவம், காவல் துறை போன்று இவர்களும் சீருடைப் பணியாளர்கள்.
இங்கிலாந்தில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து செவிலியர் பணியில் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12-ஆம் தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், செவிலியர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அனைத்து செவிலியர்களுக்கும் மதிமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனியார் கல்லூரிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

