சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மரக்காணம் கலவரத்தில் இளைஞர் கொலை

மரக்காணம் கலவரத்தின்போது, விபத்தில் இறந்தவர்களாக கூறப்பட்ட இரு இளைஞர்களில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்து வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :2 மே 2013, 10:11 am

மரக்காணம் கலவரத்தின்போது, விபத்தில் இறந்தவர்களாக கூறப்பட்ட இரு இளைஞர்களில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து விபத்து வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் சித்திரை பெருவிழாவிற்கு வாகனத்தில் சென்ற அரியலூர் செல்வராஜ், தஞ்சாவூர் விவேக் ஆகிய இருவரும், மரக்காணத்தில் நடைபெற்ற சாலை மறியலின்போது வாகனத்தை விட்டு கீழே இறங்கி நின்றனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். அவர்கள், விபத்தில் இறந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸýம், அவரது கட்சியினரும் கூறி வந்தனர்.

இந்நிலையில், அவர்களில் செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேதபரிசோதனை மூலம் தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர், வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.