சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்துள்ளது.
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் எஸ்.எஸ். விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பவுல் காந்தி என்பவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த செல்லையா நாயக்கன்பட்டி மாரியப்பன் மகன் நடராஜன் (48) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

