குமுளி அருகே வாகமண் கோலாகலமேடு மலைச் சாலையில் 1,500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், பயிற்சி மருத்துவர்கள் 4 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக ஜோசப்ராஜ், அனீஷ், ஆன்டோ, ரதீஷ், அல்போன்ஸ், விஷ்ணு தயாள் ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பயிற்சி மருத்துவர்கள் 6 பேரும் கோட்டயத்திலிருந்து காரில் சுற்றுலாத் தலமான வாகமண் வந்துள்ளனர்.
கோலாகலமேட்டுக்கு 3 கிலோமீட்டர் தொலைவில், மலைச்சாலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர்கள் வந்த கார் அந்தச் சாலையில் 1,500 அடி பள்ளத்தில் அதிகாலையில் உருண்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள், விபத்து குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில் ஜோசப்ராஜ், அனீஷ், ஆன்டோ, ரதீஷ் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், பலத்த காயமடைந்த அல்போன்ஸ், விஷ்ணு தாயாள் ஆகியோர் மீட்கப்பட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

