சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

லாரி மோதி 2 இளைஞர்கள் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

Updated On :22 ஏப்ரல் 2013, 9:59 am

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் மதன்(20). அதே பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சரத்(20). லாரி டிரைவர்களான இருவரும் நண்பர்கள்.

÷இந்நிலையில் மதன், சரத் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதிக்கு சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மதன் பைக்கை ஓட்டினார். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கரி ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த லாரி பைக்கின் பின்னால் மோதியது.

இதில் படுகாயமடைந்த மதன், சரத் ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் திப்பாபள்ளி பகுதியை சேர்ந்த தர்மையா மகன் கனகராஜை(28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.