திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் ஏப்ரல் 27ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொருளாளரும், இளைஞரணிச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி சங்கம் ஹோட்டலில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் 90ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது, இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெறும்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் மா. சுப்பிரமணியன், ஈ.ஜி. சுகவனம், எம்.பி.ஆர். ராஜேந்திரன், சுப.த. சம்பத், சுபா சந்திரசேகர், அசன் முகம்மது ஜின்னா, இ.பெ. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

