வரும் 25ஆம் தேதி நிகழவுள்ள சந்திரகிரகணத்தை முன்னிட்டு, ஏழுமலையானின் தரிசன நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சித்திரை மாத பெüர்ணமியை முன்னிட்டு, திருமலையில் ஏழுமலையானுக்கு 3 நாள்கள் வருடாந்திர வசந்தோற்ஸவம் நடைபெறுவது வழக்கம். மேலும் வரும் 25ஆம் தேதி பெüர்ணமி தினத்தில் சந்திர கிரகணமும் நிகழவுள்ளது. அன்று கடைசி நாள் வசந்தோற்ஸவ விழா என்பதால் காலை மற்றும் ஈவ்னிங் பிரேக் தரிசனமும், ரூ.300 கட்டண விரைவு தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
ரூ.50 சுதர்ஸன டிக்கெட்கள் முன்பதிவு செய்த 6,800 பேர் மட்டும் அன்று காலை 10 மணிக்குள் வழிபாட்டுக்கு கோயிலுக்குள் வந்துவிட வேண்டும். தர்ம தரிசனம் மற்றும் அனைத்துவித தரிசனங்களும் மதியம் 1.30 மணிக்கே முடிக்கப்படும். மதியம் 3 மணிக்கு மஹா சுத்தி செய்து, பூலங்கி சேவையை சார்த்திய பின் கோயில் மூடப்படும். பிறகு மறுநாள் 26ஆம் தேதி காலை சுப்ரபாத சேவைக்கு கோயில் திறக்கப்படும் என்றார் அவர். தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதால் அதற்கேற்ப ஏற்ப பக்தர்கள் ஏழுமலையானை வழிபட வரும்படி தேவஸ்தானம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

