அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் கொறடா கே. பாலகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதாவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்துக்கான காலக்கெடுவை 30-9-2012 முதல் 6 மாதங்களுக்கு நீட்டித்து 27-3-2013-ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று நாள்களில் அதாவது 31-3-2013-க்குள் இந்த 6 மாத காலக்கெடு முடிந்துவிட்டது. இதனால் பல லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை 31-3-2013 முதல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் பட்டா வழங்கி முடிக்கும்வரை இதற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

