மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கார் மீது மணல் லாரி மோதியதில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் அபுதாகீர் (39) மற்றும் பாரூக் (30), தயூப், வகிதா (21), இவரது குழந்தை ஆகியோர் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு வந்துள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலையில் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள மணப்பச்சேரி அருகே, நான்குவழிச் சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து மதுரைக்குச் சென்ற மணல் லாரி திடீரென இடது ஓரமாகத் திரும்பியதில் கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் கார் நொறுங்கியது.
காரில் இருந்த அபுதாகீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார் ஓட்டுநர் பீர்முகமது (32) உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மணல் லாரியைத் தேடி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

