நாட்டறம்பள்ளி அருகே திங்கள்கிழமை, ஏரியில் மினிபஸ் கவிழ்ந்து கைக்குழந்தை உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
நாட்டறம்பள்ளியில் இருந்து குறுபவானிகுண்டா பகுதிக்கு தனியாருக்கு சொந்தமான மினிபஸ் திங்கள்கிழமை சென்றது. பஸ்ûஸ சேகர் (30) ஓட்டிச் சென்றார். நாட்டறம்பள்ளியில் திங்கள்கிழமை சந்தை கூடியதால் மினிபஸ்ஸில் அதிக அளவாக 52 பயணிகள் ஏறியிருந்தனர்.
தொப்பலகுண்டா ஊராட்சி ஏரிக்கரை அருகே சென்ற போது மினிபஸ் கட்டுப்பாட்டை இழந்து 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை காப்பாற்றினர்.
இவ்விபத்தில் நாட்டறம்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 30 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் விஜயலட்சுமி என்பவரின் 15 நாள் பெண் குழந்தை சிறிய சிராய்ப்புகளுடன் உயிர் தப்பியது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

