இந்த நிதியாண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அவர் தாக்கல் செய்த நகராட்சி நிர்வாகம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
2012-13-ம் ஆண்டில் மூன்று மாநகராட்சிகள், 23 நகராட்சிகளில் ரூ. 10 கோடி செலவில் 52.24 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் சாலைகள் அமைக்கும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன.
2013-14-ம் ஆண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து இயந்திரம் மூலம் துகள்களாக்கும் பணி சுயஉதவிக் குழுக்களால் செயல்படுத்தப்படுகிறது.
இதுவரை 11 மையங்களில் ரூ. 80 லட்சத்தில் இதற்கான இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் மேலும் 50 மையங்கள் அமைக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

