சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த பட்ஜெட் அறிவிப்பு:
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கிழக்கு சுற்றுலா சுற்றமைப்பு மற்றும் தென்னகச் சுற்றுலா சுற்றமைப்பு ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் சிறப்புத் திட்டம் ரூ. 450 கோடி செலவில் 2012-13-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோல் 2013-14-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட சுற்றுலா மையங்களில் இத்திட்டத்தின் மூலம் ரூ. 67.91 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
"தமிழ்நாட்டுக்குச் செல்வோம் 2014' என்ற உத்தியின் அடிப்படையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் நிதியாண்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ. 153.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடல்வாழ் உயிரினக் காட்சியகம்: மீன்வளத் துறையின் தொழில்நுட்ப உதவியோடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும்.
இதுபோல் அரியலூரில் தொல்படிவப் பொருள் அருங்காட்சியகம் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்படும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 2 கோடி: தமிழ் வளர்ச்சித் துறைக்கென 2013-14 நிதியாண்டில் ரூ. 39.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு மானியமாக ரூ. 2 கோடி வழங்கப்படும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

