சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பள்ளிக் கல்வி: சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.1,300 கோடி 98 லட்சம் மாணவர்களுக்கு ரூ.217 கோடியில் புத்தகங்கள்

பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.

Updated On :22 மார்ச் 2013, 7:30 am

பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

2013-2014-ல் 97.70 லட்சம் மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க ரூ.110.96 கோடி, 14.02 லட்சம் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்க ரூ.323.70 கோடி, 53.53 லட்சம் மாணவர்களுக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக ரூ.353.22 கோடி, 13 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப் பை  வழங்க ரூ.19.79 கோடி, 6.1 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்க ரூ.8.47 கோடி, 9.67 லட்சம் மாணவர்களுக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்க ரூ. 6.65 கோடி, 6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.200.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்பளி ஆடைகள்: மலைப் பகுதிகளில் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடை வழங்க ரூ.4.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவியர்களுக்கு 32.79 லட்சம் சானிடரி நாப்கின்கள் வழங்க ரூ.54.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலமாக மாநில அரசுக்கு மொத்தமாக ரூ.1,299.74 கோடி செலவு ஏற்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.