பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
2013-2014-ல் 97.70 லட்சம் மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க ரூ.110.96 கோடி, 14.02 லட்சம் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்க ரூ.323.70 கோடி, 53.53 லட்சம் மாணவர்களுக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக ரூ.353.22 கோடி, 13 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்க ரூ.19.79 கோடி, 6.1 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்க ரூ.8.47 கோடி, 9.67 லட்சம் மாணவர்களுக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்க ரூ. 6.65 கோடி, 6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.200.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கம்பளி ஆடைகள்: மலைப் பகுதிகளில் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடை வழங்க ரூ.4.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவியர்களுக்கு 32.79 லட்சம் சானிடரி நாப்கின்கள் வழங்க ரூ.54.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலமாக மாநில அரசுக்கு மொத்தமாக ரூ.1,299.74 கோடி செலவு ஏற்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

