சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவல் துறைக்கு புதிதாக 19,526 பேர் தேர்வு

காவல் துறையில் புதிதாக 19,526 பேர் தேர்வு செய்யப்படுவர் என்று தமிழக பட்ஜெட்டில்

Updated On :22 மார்ச் 2013, 7:26 am

காவல் துறையில் புதிதாக 19,526 பேர் தேர்வு செய்யப்படுவர் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகள்: 2012-13-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,152 காவலர்கள், 377 சிறைக் காவலர்கள் மற்றும் 791 தீயணைப்புப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிதியாண்டில் (2013-14) 17,138 காவலர்கள், 1,091 துறை ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் 292 சிறைக் காவலர்களை வாரியம் தேர்வு செய்யும்.

109 காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்காக 2013-14 பட்ஜெட்டில் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரூ. 4,096.70 கோடியாக இருந்த காவல் துறைக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ. 4,706.17 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு தீயணைப்பு வீரர்களால் 3,796 பேர் காப்பாற்றப்பட்டதோடு, ரூ. 338 கோடி மதிப்பிலான சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ. 186.72 கோடி ஒதுக்கப்பட்டது. 2013-14-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 208.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல சிறைத் துறைக்கு ரூ. 179.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீதித் துறைக்கு ரூ. 695.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.