காவல் துறையில் புதிதாக 19,526 பேர் தேர்வு செய்யப்படுவர் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகள்: 2012-13-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,152 காவலர்கள், 377 சிறைக் காவலர்கள் மற்றும் 791 தீயணைப்புப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிதியாண்டில் (2013-14) 17,138 காவலர்கள், 1,091 துறை ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் 292 சிறைக் காவலர்களை வாரியம் தேர்வு செய்யும்.
109 காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்காக 2013-14 பட்ஜெட்டில் ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 4,096.70 கோடியாக இருந்த காவல் துறைக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ. 4,706.17 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு தீயணைப்பு வீரர்களால் 3,796 பேர் காப்பாற்றப்பட்டதோடு, ரூ. 338 கோடி மதிப்பிலான சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ. 186.72 கோடி ஒதுக்கப்பட்டது. 2013-14-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 208.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல சிறைத் துறைக்கு ரூ. 179.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீதித் துறைக்கு ரூ. 695.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

