சட்டப் பேரவையில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை செய்யப்பட உள்ள நிலையில் அதுகுறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை கூடியது. 2013-2014-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, தமிழக சட்டப் பேரவையில் வரும் 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிதிநிலை அறிக்கையில் உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சட்டம்-ஒழுங்கு நிலவரம்: அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் ராஜகோபால், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

